Sunday, 28 August 2011

தோழி செங்கொடி...

தோழி செங்கொடி...

நம் சகோதரர்களின்
உயிரை கயிறு
உறிஞ்சக் கூடாது
என்பதற்காக
உன் உயிரை தீ
உறிஞ்சக் கொடுப்பதா?

மரணத்தை
தடுப்பதற்கு, மரணம்தான்
வழியா?

நம் போராட்டம்தான்
நெருப்பை உமிழ வேண்டும்!
உடல்களல்ல!

மூவரை, குரல் கொடுத்தே
மீட்டுவிட முனைகையில்..
உயிர் கொடுத்து நீ மீட்க
முனைந்தாயோ?

தீயை
தீ தின்றதே...

தூக்கு மீண்டு வரும்
நம் சகோதரர்களுக்கு
பூங்கொத்துக்களை
பரிசளிக்க இருந்தோமே..
ஓர் புரட்சி பூவின்
சாம்பலை அள்ளிக் கொடுக்கும்
அவலத்தை
என்சொல்ல?

மரணம் வென்று வரும்
தோழர்களுக்கு..
உன் மரணத்தையா
வரவேற்பாய் வாசிப்பது?

ஆயிரம் மரணத்தை
அனுபவித்த கொடுமை
அவர்களுக்கு
உண்டாகுமே தோழி..

அவர்கள் சுவாசிக்கும்
விடுதலைக் காற்றில்
உன் மரண நெடி.. ஆயுள் முழுக்க
தங்குமே..
எப்படி மீள்வார்கள்
இந்த தண்டனையில்?

தமிழனின்
உடலில் காய்ந்து கிடக்கும்
பாக்கியம்
வயிறுக்கு மட்டும்தான்.
கண்களுக்கு இல்லை!

விழித்துக் கொள் தமிழா!
இதோடு முடியட்டும் யாவும்.
தீயிற்கு தீயதை மட்டும்
தின்ன கொடுப்போம்!
தீபங்களையல்ல!

Monday, 4 July 2011


தேசத்தின் காவலர்கள், காக்கும் தெய்வங்கள் என சிலாகித்து சொல்லப்படும் நம் ஜாவன்கன்.. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத
ஒரு அரக்கத்தனத்திற்க்கும், கொடூரத்திற்கும் ஜவாப்தாரியாயிருக்கிறார்கள்.

புயல், வெள்ளம், பூகம்பம் என இயற்கை பேரழிவின் போது நிவாரணப் பணிகளுக்காகவும், உள்-நாட்டுக்கலவரங்கள், அண்டைதேசத்துடனான
போர் என்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுந்தான் ராணுவ வீரர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.
அவர்கள் தியாக சீலர்கள், கண்ணியமிக்கவர்கள் என்றுதான் பெரும்பான்மையான மக்கள் "நம்பி"க்கொண்டிருக்கிறார்கள்.

Friday, 24 December 2010

ஆங்.. பெரியார்ட்ட போயி கேளு...

மதிப்பிற்குரிய பொருப்பில் வீற்றிருப்பவர்கள், தங்கள் செயலிலும், எழுத்திலும், பேச்சிலும் பொருப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
அதுதான் அவர்களுடைய பதவிக்கும், தகுதிக்கும் அழகுடையதாக இருக்கும்.
அது விடுத்து, வார்த்தை ஜாலத்திற்காகவும்.. தான் சொற்களின் மேல் கொண்டுள்ள ஆளுமையை வெளிச்சம் படுத்துவதற்கும் கைகொண்டால்... அது மிகவும் அருவ்ருப்பான ஒன்றாகிவிடும்.