Friday, 24 December 2010

ஆங்.. பெரியார்ட்ட போயி கேளு...

மதிப்பிற்குரிய பொருப்பில் வீற்றிருப்பவர்கள், தங்கள் செயலிலும், எழுத்திலும், பேச்சிலும் பொருப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
அதுதான் அவர்களுடைய பதவிக்கும், தகுதிக்கும் அழகுடையதாக இருக்கும்.
அது விடுத்து, வார்த்தை ஜாலத்திற்காகவும்.. தான் சொற்களின் மேல் கொண்டுள்ள ஆளுமையை வெளிச்சம் படுத்துவதற்கும் கைகொண்டால்... அது மிகவும் அருவ்ருப்பான ஒன்றாகிவிடும்.

Monday, 13 December 2010

ஓர் வெள்ளிக் கிழமை மாலை...
என் ஊரின் பரபரப்பான கடைத்தெரு..
விளக்கொளியை மீறிய பிரகாசம், தெருவோரம் கடை விரித்துள்ள வியாபாரிகளுக்கு.
2010 சனவரி மாதத்தில் ஒருநாள்.
சல்லிக்காசுகூட இல்லாமல் 'சில்லியாய்' இருந்த ஓர் காலைப்போழுது.
ராயபுரத்திற்கு சென்றால் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேற்றி விடலாம் என நம்பிக்கை.
நம் தமிழகத்தில் நிகழும் பாலியல் குற்றங்களையும், குற்றவாளிகளையும் சமூகம் அவர்கள் மேல் கொள்ளும் கோபத்தையும் தண்டனை என்கிற அளவுகோலையும் தவிர்த்து ஆழ்ந்து பார்த்தால் ஓர் அனுதாபமே ஏற்படுகிறது.

Bloom Box - K.R. Sridhar

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு
கவனிக்கப்பட்டு வரும் பெயர்.
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க
பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய
விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

Sunday, 12 December 2010

மன் மதன் அம்பும் இந்து முன்னணியின் வம்பும்

கடந்த சில தினங்களாக நாளிதழ்களில் முக்கியம் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது "மன் மதன் அம்பு" பாடல் விஷயம்.
இக்கலாச்சாரக் காவலர்களின் சில்மிஷம் பெங்களூரு 'பப்'பில் பெண்களை மிருகத்தனமாகத் தாக்கியதும்..

வாசித்ததும்... யோசித்ததும்...

ஒரே சமயத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கைவந்து வெகுநாளாயிற்று. ஒன்றில் ஒன்று என்று பிம்பங்கள் ஏறி குழம்புவது இல்லை. வசப்பட்டாயிற்று.
அண்மையில் சா. கந்தசாமியின் "சாயாவனம்" - சாரு நிவேதிதாவின் "வரம்பு மீறிய பிரதிகள்" - இதனுடன் சொல்லவவே கூச்சம் கொள்கிற பால குமாரனின் "கடல் குருவிகள்".

Saturday, 20 November 2010

எங்கட வெளிகளுக்கு எப்போ?



போருக்கு பின்னான ஈழத்தில், தமிழ் மக்களின் உண்மை நிலையென்ன?
மீள் குடியமர்த்தும் அலுவல், எந்தளவிற்கு நடைபெறுகிறது என்பதையறிய,
அண்மையில் சில வலைதளங்களுக்குச் செல்ல நேர்ந்தது.
மனது கனத்து போனது.

Thursday, 18 November 2010

மைனா


  ன்றாட பயணப்பொழுதுகளில், சாலை திருப்பத்திலோ.. நெடுஞ்சாலை ஓரங்களிலோ..
ரயில்வே மேம்பாலங்களிலோ மனிதத் திரள்கள் கூடியிருந்தால், நம் மனம் உணர்வது ஓர் மரணத்தை.